குழந்தை கிருஷ்ணன் வாயைத் திறந்தபொழுது, அதில் அண்ட சராசரங்களையும் கண்டாள் யசோதை. அதுபோலவே அன்னையின் வாழ்க்கையில் உள்ள ஒவ்வோர் அம்சத்திலும், உலக சிருஷ்டியின் மகிமையை நம்மால் உணர முடிகிறது. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் சாதகர்களாகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட ஒவ்வொருவரும் பெருந்தியாகங்களைச் செய்தவர்கள்; குடும்பத்தையும், உத்தியோகத்தையும், உலக இன்பங்களையும், பணத்தையும் துறந்து அன்னையின் அன்பையும், அருளையும் நாடி வந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் அளவற்ற கருணையும், அளப்பரிய அருளையும் வழங்கியுள்ளார் அன்னை.