Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

02. தீண்டிய திருவடி

குழந்தை கிருஷ்ணன் வாயைத் திறந்தபொழுது, அதில் அண்ட சராசரங்களையும் கண்டாள் யசோதை. அதுபோலவே அன்னையின் வாழ்க்கையில் உள்ள ஒவ்வோர் அம்சத்திலும், உலக சிருஷ்டியின் மகிமையை நம்மால் உணர முடிகிறது. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் சாதகர்களாகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட ஒவ்வொருவரும் பெருந்தியாகங்களைச் செய்தவர்கள்; குடும்பத்தையும், உத்தியோகத்தையும், உலக இன்பங்களையும், பணத்தையும் துறந்து அன்னையின் அன்பையும், அருளையும் நாடி வந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் அளவற்ற கருணையும், அளப்பரிய அருளையும் வழங்கியுள்ளார் அன்னை.

01. அன்னையின் தரிசனம்

காலை மணி பத்து. என் நண்பர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். அவர் வெள்ளையருக்குச் சொந்தமான ஒரு பெரிய ஆலையில் வேலை பார்த்து வந்தார். வந்தவர் பதற்றமாகக் காணப்பட்டார். ஒருவாறு சமாளித்துக்கொண்டு தம்முடைய கம்பெனியின் மிகப்பெரிய அதிகாரி என்னைக் காண வந்திருப்பதாகச் சொன்னார். அவர் சொல்லி முடிப்பதற்குள் குறிப்பிட்ட அதிகாரியே அங்கு வந்துவிட்டார். அந்த மனிதர் மிகவும் அடக்கமாகவும், மரியாதையாகவும் காணப்பட்டார். அவர் எதற்காகவோ தயங்குவது எனக்குத் தெரிந்தது. எதற்காக அப்படித் தயங்குகிறார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இதற்கிடையில் என் நண்பர் நின்றுகொண்டே இருந்தார்.

பகுதி 2

அன்னையின் தரிசனம் முதல் பாகம்

இரண்டாம் பகுதி

அன்னையும் அன்பர்களும்

7. பூக்களும் அவை சொல்கின்ற செய்திகளும்

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் பூக்களுக்கு எப்படிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பது யாவரும் அறிந்ததே. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் ஸ்ரீ அன்னைதான். அவரைப் பொருத்தவரை, குழந்தைகளுக்கு முதல் இடம் கொடுக்கப்பட வேண்டும்; இரண்டாவது இடம் பூக்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பூக்களைத் தம்முடைய இரண்டாவது குழந்தை என்றே அன்னை குறிப்பிடுவார். பூக்களின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் உலகிற்கு எடுத்துச் சொன்னவர் அன்னை என்றே கூற வேண்டும்.

6. ஸ்ரீ அரவிந்தாசிரமம்

‘ஸ்ரீ அரவிந்தாசிரமம் ஏற்றமிகு எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சோதனைக்கூடம்’என்று சொல்வார் ஸ்ரீ அரவிந்தர். இதன் பொருள் என்ன? இப்பொழுதுள்ள மனித சமுதாயம் தன்னலம், பயம், பொறாமை, வெறுப்பு, பொய், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இத்தீமைகளை வேரறுத்து, உண்மை, அன்பு, இரக்கம், தைரியம், தியாகம், ஆகியவற்றை மனித சமுதாயத்தில் நிலைபெறச் செய்ய வேண்டும். அவ்வப்போது தோன்றிய மகான்கள் மனித சமுதாயத்தில் நோயாகப் பரவிக்கிடக்கும் தீமைகளோடு போராடிவந்தாலும், கட்டிய அணையையே திரும்பத் திரும்பக் கட்டிய கதையாகிவிட்டது. கட்டிய அணை சிறிது காலம் தாக்குப் பிடிக்கும். பிறகு தகர்ந்துபோய்விடும்.

5. அன்னையின் அருட்சக்தி

அன்னைக்குச் சூட்சுமச் சக்திகள் பல இருந்தன. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாத அல்லது கேட்க முடியாத விஷயங்களை அன்னையால் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியும். அன்னை ஒரு மனிதனைப் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். கண்களுக்கு மட்டுமே புலப்படுகிற அவனுடைய புறத் தோற்றத்தை மட்டுமே அவர் பார்ப்பதில்லை. அவனைப் பார்த்தமாத்திரத்திலேயே அவனுடைய முற்பிறவி, அவனுடைய சென்ற காலம், எதிர்காலம், அவனுடைய அடுத்த பிறவி, ஆகிய அனைத்தையும் அறிந்துகொள்வார். அன்னைக்கும், உலகிலுள்ள கடவுளர்க்கும் நேரடியான தொடர்புகள் உண்டு.

4. அன்னையும் ஆசிரமமும்

அன்னை ஒரு சமயம் இவ்வாறு கூறினார்: ‘ஸ்ரீ அரவிந்தர் இருந்தபோது யோகப் பணியை அவர் கவனித்துவந்தார். நான் ஆசிரமத்தை நடத்துகின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். முப்பது வருடங்களாக இந்தப் பொறுப்பை எந்தவிதமான ஒரு குறையும் இல்லாமல் என்னால் செயல்படுத்த முடிந்தது’.

3. அன்னை

‘பராசக்தியின் திரு அவதாரம்’என்றும், ‘அன்னை’என்றும் பகவான் ஸ்ரீ அரவிந்தரால் அழைக்கப்பட்ட மீரா, பிரான்ஸ் நாட்டில் 1878இல் பிறந்தார். அவர் மிகச்சிறு வயதிலேயே ‘இறைவன் இன்னவன்’என்று இனம் கண்டு கொண்டவராக விளங்கினார். அவர் உறங்குகின்றபொழுது பல ஆசிரியர்கள் அவருடைய கனவில் தோன்றி, அவருக்குத் தேவையான ஆன்மீகப் பயிற்சியை அவ்வப்பொழுது அளித்து வந்தார்கள். இதன் பயனாக அவருக்கென ஒரு கொள்கை உருவாயிற்று. ‘இயல்பாகவே இறைத்தன்மை உடையது ஆன்மா. உடலில் இத்தன்மை வெளிப்படுவதில்லை. இருப்பினும், இவ்வுடல் இறைத் தன்மையை வெளிப்படுத்தும் தகுதி படைத்தது.

2. ஸ்ரீ அரவிந்தர் கேட்ட குரல்

அது 1908ஆம் ஆண்டு, மே மாதம். வெள்ளையர் ஆட்சியில் பாழ்பட்டு நின்ற பாரத தேச மக்களை, சுதந்திர வேட்கை கொண்ட எரிமலைகளாக வெடிக்க வைப்பதற்கு ஸ்ரீ அரவிந்தர் தம் பேச்சையும், எழுத்தையும் சக்தி மிக்க ஆயுதங்களாக ஏவிவிட்டுக்கொண்டிருந்தார். வெள்ளை அரசாங்கம் ஸ்ரீ அரவிந்தரின் அரசியல் எழுச்சியைக் கண்டு வெலவெத்து நின்றது. ‘அவரை வெளியே விட்டு வைப்பது நமது ஆட்சிக்கு ஆபத்து’என்று நினைத்த கும்பினித் துரைத்தனம், ஸ்ரீ அரவிந்தரை ஒழித்துக்கட்டத் திட்டமிட்டது. அச்சமயத்தில் சில தீவிரவாதிகள் வெள்ளையர் சிலரை வெடிகுண்டு வீசிக் கொன்று தீர்த்தார்கள்.

1. ஸ்ரீ அரவிந்தர்

அலிப்பூர் சிறையில் இருந்தபொழுது அவருக்கு வேறொர் அனுபவமும் ஏற்பட்டது பற்றிப் பேசுமுன், அதோடு தொடர்புகொண்ட நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டும். அது அவர் பரோடாவில் இருக்கும்பொழுது நிகழ்ந்தது. அப்பொழுது அவர் பிராணாயாமப் பயிற்சிகளைச் செய்வது உண்டு. ஒரு நாள் விவேகாந்தரின் திருவுருவம் தம் அருகில் நின்றுகொண்டு, தாம் செய்யும் பயிற்சிகளைக் கவனித்துக்கொண்டு இருப்பதை ஸ்ரீ அரவிந்தர் நிதர்சனமாகக் கண்டார். அதற்குப் பிறகு விவேகானந்தரின் திருவுருவம் அலிப்பூர் சிறையிலும் அவருக்குக் காட்சியளித்தது. அலிப்பூர் சிறைக்கு வந்தபொழுது ஸ்ரீ அரவிந்தர் அத்வைத சித்தி பெற்றவராக இருந்தார்.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 69
  • Page 70
  • Page 71
  • Page 72
  • Page 73
  • Page 74
  • Page 75
  • Page 76
  • Page 77
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal