Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

01. தூய்மையால் கிடைத்த அருளும் பொருளும்

‘அமுதசுரபி'யில் அன்னையைப் பற்றிய கட்டுரையில் 1980ஆம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் தொடர்ந்து வருவதை வாசகர்கள் அறிவார்கள். தொடக்கக் காலத்தில், ‘பூக்களும் அவை சொல்கின்ற செய்திகளும்’என்ற கட்டுரை வெளியாயிற்று. ‘பூக்களின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் உலகுக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் அன்னை’என்பதைக் குறிப்பிட்ட அந்தக் கட்டுரை, ‘நம் வாழ்க்கையில் நன்மைகளும், தீமைகளும் கலந்துள்ளன. தீமைகளைத் தவிர்க்கவும், நன்மைகளைப் பெருக்கிக்கொள்ளவும் பூக்கள் பெருந்துணையாக அமைந்துள்ளன. பூக்களின் துணையால் நாம் நம் வாழ்க்கையைச் செப்பனிட்டுக்கொள்ளலாம்.

பகுதி 3

அன்னையின் தரிசனம் முதல் பாகம்

மூன்றாவது பகுதி

வாசக அன்பர்களும் அன்னையும்

10. கைகொடுத்த கருணை

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டிருந்தேன். தென்னை, முந்திரி என்னுடைய முக்கிய பயிர்கள். என் தென்னந்தோப்பு, கடலை ஓட்டி இருந்தது. மேற்குத் திசையைத் தவிர, மற்ற மூன்று பக்கங்களிலும் உப்பங்கழியே எல்லையாக அமைந்திருந்தது.

09. சிறு காணிக்கை கொண்டுவந்த பெருஞ்செல்வம்

அன்னையிடம் பக்தியும், விசுவாசமும் மிகக்கொண்ட ஓர் அமெரிக்கர் என்னுடைய நண்பர். அன்னையைப் பற்றிக் கூறக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவருடைய வாழ்க்கை எத்தகைய செல்வமும், செழிப்பும் பெற்றுச் சிறப்பு அடைந்தது என்பதை அந்த அமெரிக்க நண்பர் ஒரு சமயம் என்னிடம் விவரித்தார். அதை அவர் கூறிய விதத்திலேயே இங்கே தருகிறேன்.

நான் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா என்னும் மாநிலத்தைச் சேர்ந்தவன். ஒரு முறை ஸ்ரீ அரவிந்தாசிரமத்திலிருந்து நான் தாயகத்துக்குச் சென்றிருந்தபோது என் நெடுநாளைய நண்பன் மார்க் டேனியல்லை ஒரு நாள் சந்திக்க நேர்ந்தது. அவனை நான் ‘மார்க்’ என்றே அழைப்பேன்.

08. பக்தியால் பல கோடிகள்

அவர் ஒரு வடநாட்டு வியாபாரி. திறம் மிகுந்த கைத்தொழில் விற்பன்னர். நம் தென்னகத்தில் கருமை நிறத்து மாக்கற்கள் மட்டுமே கிடைக்கின்றன ஆனால் வட இந்தியாவில் பல அழகான வண்ணங்களில் மாக்கற்கள் கிடைக்கின்றன. அவற்றை அகழ்ந்து எடுத்து, கடைந்து, பல அற்புதமான பொருள்களைச் செய்யலாம். மரத்தைக் கடைந்து செய்யக்கூடிய சிறுசிறு பொருள்கள் அனைத்தையும் அந்த மாக்கற்களில் படைக்கலாம். அவை பார்ப்பதற்குக் கவர்ச்சியாகவும், வனப்பாகவும் இருக்கும்.

07. விதிக்கு விதி செய்யும் அன்னை

சுமார் அறுபது ஆண்டுகட்கு முன் ஒரு பெரிய ஜமீன்தார் நாடி ஜோஸ்யம் பார்த்தார். நாடியில் சொல்லப்பட்ட விஷயங்களும், ஜமீன்தாரின் வாழ்க்கை நடப்புகளும் ஒரே மாதிரி பொருந்தியிருந்ததை அறிந்து அவரும், மற்றவர்களும் பெரிதும் வியந்தனர். ஜமீன்தாரின் எதிர்காலத்தைப் பற்றி நாடி சிறப்பாக விவரித்தது. அது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. நாடியை மேலும் படித்துக் கொண்டே போன ஜோதிடர், ஓரிடத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு ஜமீன்தாரின் முகத்தைப் பார்த்தார்.

‘ஏன் நிறுத்திவிட்டீர்கள்? மேலே படியுங்கள்’என்றார் ஜமீன்தார்.

06. வால்டர்

வால்டர் ஓர் அமெரிக்கர். அவருடைய மகனும், மருமகளும் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டிருந்தார்கள். வால்டர் அவர்களைப் பார்க்கும் ஆவலோடு 1972இல் இந்தியாவுக்கு வந்தார். அது அவருடைய முதல் இந்தியப் பயணம். அப்போது அவருக்கு வயது 63.

05. ரிஷ்யசிருங்கர் ராபர்ட்

அது ஒரு நவம்பர் மாதம். மழை விட்டு விட்டுப் பெய்துகொண்டே இருந்தது. பகலில் பிடித்துக்கொண்ட மழை, இரவில் பலத்துவிட்டது. நான் மழையின் ஜாலங்களையும், ஓலங்களையும் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டேன்.

04. இருள் நீங்கியது

அவர் ஓர் அமெரிக்கர். பல வருடங்களாக ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் சாதகராக இருந்துவருகிறார். ஒரு நாள் அவருடைய வீட்டிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவருடைய மூத்த சகோதரர் திவாலாகி விட்டதாகவும், அதை அவர் சட்டப்படி அறிவிக்கப்போவதாகவும் எழுதப்பட்டு இருந்தது. அந்த நிலை ஏன் ஏற்பட்டது என்ற விவரம் கடிதத்தில் இல்லை. அதனால் அந்த அமெரிக்கச் சாதகர் மிகவும் வருந்தினார்.

03. அழைத்தால் உடன் வருவார்

நாள்தோறும் விடியற்காலை நாலரை மணிக்குத் திறக்கப்படுகின்ற ஸ்ரீ அரவிந்தாசிரமத்தின் பிரதான நுழைவாயில் இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. சாதகர்கள் அன்னையின் சமாதியை வணங்கியவண்ணம் இருப்பார்கள். அமைதியும், அருள்மணமும் கமழும் அந்தச் சூழலில் சாதகர்களில் பலர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி இருப்பார்கள். வழக்கமாகவோ, அவ்வப்பொழுதோ வருகை புரிகின்ற பக்தர்களின் கூட்டம் இரவு ஒன்பது மணிக்குள் வடிந்துவிடும். பேரமைதியில் அருளைத் துய்க்க விழைகின்ற நான் இரவு ஒன்பது மணியிலிருந்து கதவு மூடப்படுகின்ற வரை சமாதியின் அருகே இருந்துவிட்டு வருவது வழக்கம். ஒரு நாள் இரவு 11 மணிக்குச் சமாதியைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தேன்.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 68
  • Page 69
  • Page 70
  • Page 71
  • Page 72
  • Page 73
  • Page 74
  • Page 75
  • Page 76
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal