Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

10. ஸ்ரீ அரவிந்தரின் பரிபூரண யோகம்

சாக்ரடீஸ், ஷேக்ஸ்பியர், நியூட்டன், ஐன்ஸ்டீன், பெர்னார்ட்ஷா போன்ற பெருமக்களை ‘மேதைகள்’ என்று உலகம் போற்றுகிறது. இந்த மேதைகளின் சிந்தனைகளும், கருத்துகளும் மனித அறிவு உச்ச நிலையை எட்டி இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. விஞ்ஞானம், இலக்கியம் போன்ற துறைகளில் மட்டுமன்று, தத்துவத் துறையிலும் அத்தகைய மேதைகள் தோன்றியுள்ளனர். அவர்களுடைய கருத்துகள் புரட்சிகரமானவையாக விளங்குகின்றன. அவர்கள் அறிவில் எவ்வளவுதான் மேம்பட்டு விளங்கினாலும், அறிவின் எல்லைக்கு உட்பட்டவர்களே. அறிவின் எல்லையைக் கடந்து செல்ல வேண்டுமானாலும், எண்ணங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்.

09. சேவையின் பெருமை

அந்த அன்பர் எனக்கு அப்பொழுதுதான் அறிமுகமானார். ஆனால் நீண்ட நாள்களாகப் பழகியவரைப் போல இனிமையாகப் பேசினார். அவருக்குக் கம்பீரமான தோற்றம்; தெளிவும், அமைதியும் நிறைந்த முகம். இறுதியில், ‘நான் ஒரு காரோட்டி’ என்று பேச்சை முடித்தார் அவர்.

அவர் கூற்றை நம்புவது எனக்குச் சிறிது கடினமாக இருந்தது. அவருடைய தோற்றமும், பேச்சும் ஒரு டிரைவருக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. ஒரு பெரிய மனிதத்தனம் அவர் முகத்தில் நிலவிக்கொண்டிருந்தது. எனக்குக் குழப்பம். அவரைப் பற்றிய என் நோக்குக்கும், அவருடைய வாக்குக்கும் உள்ள வேறுபாட்டிற்கு என்ன காரணம்?

08. ஆன்மீக ஒளியும் கர்மப் பலனும்

‘பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க’ என்பது திருவாசகம். பிறப்பு கர்மத்தால் ஏற்பட்டது. முற்பிறவியின் கர்மமே இப்பிறப்பு. பிறவியிலிருந்து இறைவனின் திருவடி நீழல் விடுதலை அளிக்கும். அத்திருவடிகளைக் கனவிலிருந்து தரிசிக்க வள்ளலார் அவாவுகின்றார். அதற்கும் அவன் கருணை வேண்டும் அன்றோ? ‘கண்ணேறு படுமென்றோ கனவிலேனும் காட்டென்றால் காட்டுகிலாய்’என்று வெதும்பிப் பாடுகின்றார் இராமலிங்க அடிகளார். பிறப்பிலிருந்து விடுபடுவது தவத்தின் நோக்கம். தவ முயற்சி பலித்தால், பிறப்புக்குக் காரணமான கர்மா கரைந்துவிடுகின்றது. அதனால், ‘ரிஷிகளைக் கர்மா பாதிக்காது’ என்பார்கள்.

07. மானஸீக உருவம்

அன்னையை வழிபடச் சிறந்த முறையை, ‘நினைவே வழிபாடு’ என நான் சொல்வதுண்டு. ‘மனத் தூய்மையும், பக்குவமுமே அடிப்படை நிபந்தனைகள்’ என்பதால், நினைவு, தூய்மையைச் சிறப்பாக்குகிறது. நெஞ்சம் தியானத்தில் நிறைவது போல் நிறைகின்றது. வழிபாட்டின் குறிக்கோள் அளவு கடந்து பூர்த்தியாகிறது.

06. சூட்சுமப் பார்வை

கண் பார்வை இல்லாத திருதராட்டினனுக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றை அறிவிக்க, சஞ்சயனுக்குச் சூட்சுமப் பார்வையை அளித்தார் வியாசர் பகவான். வெகுதூரத்தில் - கண் காணாத இடத்தில் - நடப்பதைப் பார்க்கக்கூடிய சக்திக்கு ‘சூட்சுமப் பார்வை’ (subtle vision) என்று பெயர். ஊனக் கண்களுக்குத் தெரியாதவற்றைக்கூட இந்தச் சக்தியால் கண்டறியலாம். என்றாலும் அவை ஞானக் கண்கள் ஆகா. ஞானத்தால் சூட்சுமப் பார்வை ஏற்பட்டால், அதற்குப் பெயர் ஞான திருஷ்டி.

05. அன்னையின் அருளும் பொருளும்

இறைவனின் கடைக்கண் பார்வையால் தானாகவே வந்து மனித வாழ்வில் செயல்படுவது அருள். உடல் உழைப்பால் பலனாகப் பெறுவது பொருள்.

பரம்பொருளின் அருளுக்கும், பாமரனின் பொருளுக்கும் தொடர்பு இருக்கின்றதா? இருப்பின் அன்னை வழிபாடு அத்தொடர்பை எப்படி ஏற்படுத்துகின்றது? இக்கருத்தை விளக்குவதுதான் கட்டுரையின் நோக்கம்.

உழைப்பாளிக்கு உரியது வெற்றி. வெற்றியின் பலனாகக் கிடைப்பது பொருள். உழைபாளியால் முடிந்ததெல்லாம் உழைப்பே. அவன் தன்னைப் பொருத்தவரையில் தளராது உழைக்க முடியும். அதன் அளவுக்கேற்ப அவன் ஊதியத்தைப் பெற முடியும்.

04. உன்னைத் தேடி வரும் அன்னை

குழந்தைகளின் உள்ளம் தூய்மையானது. தூய்மையான உள்ளத்தின் பிரார்த்தனையை அன்னை பூரணமாக ஏற்றுக்கொள்கின்றார். தூய்மை முழுமையாக இருந்தால் பூஜைகள், மந்திரங்கள், எதுவும் தேவையில்லை.

ஒரு பெண்மணிக்குக் கடுமையான வயிற்று வலி. அது அவரைப் பன்னிரண்டு ஆண்டு காலமாகப் படாதபாடு படுத்திக்கொண்டிருந்தது. ஒரு நாள் அவருக்கு வலி அதிகமாகிவிட்டது. மருந்துகளுக்கெல்லாம் அது அசைந்து கொடுக்கவில்லை. நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகமாகிக்கொண்டே போயிற்று. அவர் புழுவாய்த் துடித்தார். அதிலிருந்து விடுதலை பெற உயிரை மாய்த்துக் கொள்வது எனத் தீர்மானித்தார்.

03. அன்னையின் வழியில் அன்றாட வாழ்க்கை

‘வாழ்க்கை’ என்றால் நல்லது, கெட்டது என்ற இரண்டும் உண்டு. சில சமயங்களில் வெற்றியையும், பல சமயங்களில் தோல்வியையும் அளிப்பது வாழ்க்கை. நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதைப்போல வாழ்க்கையிலும் இரு பக்கங்கள் உண்டு. ‘செல்வம் சகடக்கால் போல வரும்’ என்றும், ‘யானைக்கும் அடி சறுக்கும்’என்றும் கூறும் வாழ்வியல் உண்மைகளை, உலகத்தின் எல்லா நாடுகளும், மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

02. சத்திய ஜீவியம்

பாரதப் போரை ‘தர்ம யுத்தம்’ என்போம். கிருஷ்ண பரமாத்மா உலகில் அவதாரம் எடுத்து, துஷ்டர்களைத் தண்டித்து, சிஷ்ட பரிபாலனம் செய்து, 18 நாள்கள் யுத்தம் நடத்தி, தர்மத்தை உலகில் நிலைநாட்டினார்.

01. கேளாமலேயே கொடுக்கும் தெய்வத்தாய்

‘கேட்டதெல்லாம் கொடுப்பாய்’என்று நம் இஷ்ட தெய்வத்தைக் கவி பாடி இறைஞ்சுவார்கள், கவிஞர்கள். ‘பக்தன் தெய்வத்திடம் முறையிடாமலேயே வரம் பெற்றான்’ என்பது நாம் கேட்டதொன்றில்லை. ஆனால், கேளாமலே கொடுக்கும் தெய்வத்தாய் ஒருவர் உண்டு. அந்தத் தெய்வம் நம்மிடையே, ஏறக்குறைய நூறாண்டு காலம் மானுடம் தாங்கி வாழ்ந்ததும் உண்டு. அந்தத் தெய்வத்தாய் நம் அன்னையே என்பது இக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கெல்லாம் நன்கு புரிந்திருக்கும்.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 65
  • Page 66
  • Page 67
  • Page 68
  • Page 69
  • Page 70
  • Page 71
  • Page 72
  • Page 73
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal