நான் பள்ளியில் ஆசிரியராக இருந்து, அதை விட்டுவிட்டு விவசாயத்தையும், அன்னையின் சேவையையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. நான் ஆசிரியப் பணியைச் செய்த கடைசி நேர அனுபவத்தில், அன்னையின் அருள் ஓர் ஆர்வமுள்ள மாணவனின் வாழ்வில் வெளிப்பட்டதை இப்பொழுது கூறுகின்றேன்.