Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

17 - அன்னையின் அருளுக்கு இணை ஏது?

அந்த அன்பர் ஓர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். ‘அமுதசுரபி’யில் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீ அரவிந்தர் அன்னையைப் பற்றிய கட்டுரைகளைப் படிப்பதற்கு முன்பே, அவர் ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்கு வந்திருக்கின்றார். அன்னையிடமும் ஸ்ரீ அரவிந்தரிடமும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.

16 - அன்பர்களின் வாழ்வில் அற்புதங்கள்

அவர் ஒரு வாசக அன்பர். “அமுதசுரபி”யில் அன்னையின் அருளை விளக்கி எழுதப்படுகின்ற கட்டுரைகளைப் படிக்கின்ற வாய்ப்பு, தமக்குச் சமீப காலமாகக் கிட்டியதாக எழுதி இருந்தார் அவர். அதாவது 1985-இன் பிற்பகுதியில் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதிலிருந்து அக்கட்டுரைகளை அவர் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து படித்து வருகிறார். அதன் மூலம் அவருக்கு அன்னை அருளில் நம்பிக்கை வளர்ந்துவிட்டது.

15 - அன்னையின் அருளில் நம்பிக்கை

1985-ஆம் வருடம், நவம்பர் மாதம் 12, 13 தேதிகளில் தமிழ்நாட்டிலும், சென்னை மாநகரிலும் மழை விடாதுபெய்து கொண்டிருந்தது. அதோடு புயலும் சேர்ந்து கொண்டது. பிறகு வெள்ளப் பெருக்குக்குக் கேட்பானேன்?

அது சென்னையில் தாழ்வான பகுதியில் உள்ள மாடி வீடு. அதன் கீழ்ப் பகுதியில் “அமுதசுரபி” வாசக அன்பர் ஒருவர் வசிக்கிறார். மாடிப் பகுதியில் வீட்டின் சொந்தக்காரர் வசிக்கிறார்.

14 - சுற்றுச் சுவர்

அன்னையின் அணுக்கமான பக்தர் ஒருவருக்கு ஏற்பட்ட ஓர் இன்னலை, அன்னையின் அருள் எவ்வாறு ஊடுருவி ஆறுதல் அளித்தது என்பதை இங்கே அவரே கூறுகின்றார்:

நான் புதுச்சேரியில் குடியேறி இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. நான் வசித்து வந்த பகுதியில் குடி நீருக்குப் பஞ்சமே இல்லை. எந்த நேரத்தில் குழாயைத் திறந்தாலும் நீர் பிரவாகமாக வரும். நாளாக நாளாக இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

13 - பாலையிலும் பசுஞ்சோலை

அன்பர் ஒருவருடைய பெண் எம்.எஸ்ஸி.வரை படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தாள். வேலை அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடுமா? கிடைக்கவில்லை. அந்த அன்பர் அது பற்றி எனக்குக் கவலையுடன் எழுதி இருந்தார். “அன்னை இருக்க அஞ்சல் ஏன்? ‘கவலை’ என்ற சுமையை நீங்கள் ஏன் சுமந்து மூச்சுத் திணறுகிறீர்கள்? அதை அன்னையிடம் சமர்ப்பித்துவிட்டு நீங்கள் லேசாகிவிடுங்கள். உங்கள் பெண்ணுக்கு உடனே வேலை கிடைத்துவிடும்” என்று நான் அவருக்குப் பதில் அனுப்பினேன்.

12 - தேடி வந்த செல்வம்

அன்று நான் குடும்பத்தோடு ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். வாசல் கதவை மூடிப் பூட்டவிருந்த சமயத்தில் என் மைத்துனியும், அவருடைய கணவரும் விருந்தாளிகளாக வந்து சேர்ந்தனர். அன்று ஆசிரமத்தில் தங்கி விட்டு மறு நாள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பது என் திட்டம். இந்த நிலையில் விருந்தினர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள்!

11 - கைகொடுத்த நம்பிக்கை

பதினைந்து ஏக்கர் நிலத்தில் தென்னை பயிர் செய்து, ஆண்டு தோறும் நல்ல அறுவடை செய்த அனுபவம் எனக்குண்டு. அதைத் தொடர்ந்து 100 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் தென்னைப் பயிர் செய்யத் திட்டமிட்டேன். என் நண்பர் என் திட்டத்தில் அக்கறை காட்டவே, ‘எங்கேனும் 100 ஏக்கர் தரிசு நிலம் விலைக்குக் கிடைக்குமா?’ என்று தேட ஆரம்பித்தேன். நான் நினைத்த மாதிரி நூறு ஏக்கர் பரப்பில் தரிசு நிலம் கிடைக்கவில்லை. ஒரு மலைப்பாங்கான இடத்தில் நூறு ஏக்கர் முந்திரிக் காடு ஒன்று விலைக்கு வருவதாகக் கேள்விப்பட்டேன். எனக்கு முந்திரிப் பயிர் சம்பந்தமான முன் அனுபவமோ, அல்லது ஆர்வமோ இல்லை.

10 - கர்மவினையும் அன்னையின் அருளும்

தவிர்க்க இயலாத ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டு விழி பிதுங்கும்பொழுது அதனை, ‘தலைவிதி’ என்கின்றோம். இந்தத் ‘தலைவிதி’ என்பது என்ன? ‘முற்பிறவியில் செய்த வினையால் விளையும் பயன்களை யாராலும் தவிர்த்துக் கொள்ள முடியாது. அவற்றை அனுபவித்தே தீர வேண்டும்’ என்று தீர்ப்பு அளிப்பதுதான் தலைவிதி. தலைவிதியால் மட்டுமன்று; ஆரம்பக்கால வாழ்க்கையில் நாம் செய்த செயல்களே பிற்கால வாழ்க்கையின் முடிவாகவும் அமைகின்றது. செயல்களின் காரணமாக விளையும் பலன்களை எந்த விதத்திலும் தவிர்க்க முடியாது. செய்த வினைக்கு ஏற்ப, அதன் பலனை அனுபவித்தேயாக வேண்டும். இது தொன்று தொட்டு வரும் வினைக் கொள்கையாகும்.

09 - இழந்ததைப் பெறலாம்

தொலைந்து போன நகை, பறிபோன உத்தியோகம், திருடு போன பணம், கைவிட்ட வாழ்க்கை போன்றவையும் அந்த நேரத்தில் நேர்ந்துவிட்ட இழப்புகளே. ஆனால், நான் இங்கே கூறப் போவது இந்த இழப்புகளைப் பற்றி அல்ல. இழந்த பெருஞ் செல்வத்தைப் பற்றி.

‘ஒரு காலத்தில் 100 வேலி நிலம் இருந்த பண்ணை அது. இப்பொழுது ஒன்றும் இல்லை. அந்தக் காலத்தில் 60 பஸ்கள் ஓடின. இப்பொழுது ஒரு பஸ்தான் ஓடுகின்றது. இந்தப் பகுதிக்கு கவர்னர் வந்தால் இவர்தாம் வரவேற்பார். இன்று நொடித்துப் போய் மூலையில் கிடக்கின்றார்’ என்பது போன்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டவர்களைப் பற்றியே இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

08 - கணவனும் மனைவியும்

35 ஆண்டுகளுக்கு முன்னர் நான் அன்னையைத் தரிசிக்க முதன் முதலில் வந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஏராளம். எனக்கு ஏற்படும் அனுபவங்களை, நான் அன்னையின் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்ள முயல்கின்றேன். அன்னையின் ஆசி பெற்றுத் திருமணம் புரிந்து கொண்டவர்களின் வாழ்க்கை அனுபவம் அவற்றுள் ஒன்று. என்னுடைய அனுபவத்தில் அன்னையின் ஆசியைப் பெற்றுத் திருமணம் செய்து கொண்டவர்களுடைய வாழ்க்கை, சுமுகமும், அன்பும், ஆழ்ந்த பற்றுதலும் நிறைந்து மற்றவர்கள் வியக்கும் அளவில் சிறப்பாக அமைந்துள்ளது.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 71
  • Page 72
  • Page 73
  • Page 74
  • Page 75
  • Page 76
  • Page 77
  • Page 78
  • Page 79
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal