அந்த அன்பர் ஓர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். ‘அமுதசுரபி’யில் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீ அரவிந்தர் அன்னையைப் பற்றிய கட்டுரைகளைப் படிப்பதற்கு முன்பே, அவர் ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்கு வந்திருக்கின்றார். அன்னையிடமும் ஸ்ரீ அரவிந்தரிடமும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.