Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

1. சாஸ்திர ஞானமும் குருவும்

தத்துவ ஞானமான சாஸ்திரமும், மனித முயற்சியின் புனித உருவமான உற்சாகமும், சாதகனின் பயிற்சியை யோகானுபவம் ஆக்கும் குருவின் அருளும், இவற்றை எல்லாம் பூர்த்தி செய்யும் காலத்தின் கதியும் ஒருங்கிணைந்து யோக சித்தியை உருவாக்குகின்றன.

சிந்தனைக்குரிய மனித ஜீவனின் ஹ்ருதயத்தில் ‘வேத இரகசியம்’ எனும் பத்மம் மொட்டாக அரும்பியுள்ளது. பரமனின் கடாட்சம் பத்மத்தின் மீது பட்டவுடன், அது இதழ் இதழாகக் கட்டவிழ்கிறது.

பரமனே பத்மத்தின் பிதா. பரம்பொருளின் திருவுள்ளமே மனித உள்ளத்தின் மலர்ச்சி. திருவுள்ளம் இன்றி இதழ் அவிழ்வதில்லை. திருவுள்ளத்தால் தீண்டப் பெற்றால், மலர்வதைத் தடை செய்ய ஒருவர் இல்லை.

III. யோகம்

07. புஷ்பாஞ்சலி

சிருஷ்டியின் சிறப்பு புஷ்பம். வசந்தத்தில் மலரும் செடியின் வாழ்வில், தான் பழுத்துப் பலனளிக்கும் தருணத்தைவிடத் தன் ஜீவன் பூரித்து மலரும் நேரமே சிறந்தது. மலர்ச்சியே மணத்தின் பிறப்பிடம். அதனால் மலர், இறைவனுக்குகந்த சமர்ப்பணம் ஆகிறது. இறைவனை அடைய, அவன் அருளுடன் ஜீவனுள்ள தொடர்பைப் பெறப் புஷ்பம் உரிய கருவியாகிறதால் புஷ்பாஞ்சலி வழிபாட்டு முறைகளில் சிறப்பிடம் பெறுகிறது.

06. தீய சக்திகள்

ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் தங்கியிருந்த வீட்டில் ஒருநாள் கல் மாரி பொழிய ஆரம்பித்தது. ஸ்ரீ அரவிந்தர் இருந்த அறை தவிர மற்ற எல்லா அறைகளிலும் கல் ஏராளமாக விழுந்தது. யார் மீதும் படவில்லை என்றாலும், தொடர்ந்து விழுந்தது. புதியதாகச் சேர்ந்த ஒரு வேலைக்காரப் பையனை அன்னை வெளியே போகச் சொன்னதும், கல் விழுவது நின்றுவிட்டது. சில நாள் கழித்து அப்பையனுடைய குரு மரணப் படுக்கையிலிருப்பதாகவும், அவர் ஒரு மந்திரக்காரர் எனவும் தெரியவந்தது. செய்தியைக் கேட்ட ஸ்ரீ அரவிந்தர் ‘இது என்ன பெரிய குற்றம்? இதற்காகவா அவன் இறக்க வேண்டும்?’ என்றார். மந்திரவாதி பிழைத்துக் கொண்டார்.

05. குடும்பக் கடன்

திருமணத்திற்கு வாங்கிய கடன், வீடு கட்டுவதற்காக வாங்கிய கடன் போன்ற பெரிய கடன்களாக இல்லாமல், நடுத்தரக் குடும்பங்களில் அவசரமான காரியங்களுக்காகவும், தவிர்க்க முடியாத மருத்துவச் செலவுக்காகவும் என வாங்கி, ‘இனி இந்தக் கடனை அடைக்கவே முடியாது’ என்ற நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திய தலைக்கு மேல் போய்விட்ட கடனை, ‘குடும்பக் கடன்’ என்று பெயரிட்டு, ‘அது ஏற்படுவது எப்படி? எதனால்? அதற்கு ஒரு முடிவு உண்டா? இல்லையா? இல்லையெனில், அன்னையின் விளக்கம் ஏதேனும் இருக்கிறதா? அன்னையும் கைவிட்டு விடுவார்களா?’ என்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குப் பதில் அளிக்கும் வாயிலாக இந்தக் கட்டுரை அமைகிறது.

04. மகனுக்குப் பொறுப்பு

பொறுப்புணர்ச்சி சிறந்தது. பொதுவாக, அது குடும்பத்தில் பரம்பரையாக வருவது. ‘எல்லோரும் பொறுப்பாக இருக்கும் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் பொறுப்பாக நடந்து கொள்ளாவிட்டால், மற்றவர்கள் கவலையில் மூழ்கி, பிள்ளைக்குப் பொறுப்பு இல்லை. அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ தெரியவில்லையே’ எனத் துவண்டு போய் விடுவார்கள்.

விதவையான தாயார் ஒருவர் தன் ஒரே பையனைப் படிக்க வைத்து ஒரு வேலையையும் அவனுக்குத் தேடிக் கொடுத்த பின்பு, ‘பொறுப்பு’ என்பதே துளியும் இல்லாமல், அவன் வீட்டையும், தாயையும் கவனிக்காமல் இருந்து விடுவதும் உண்டு.

03. புத்திர சந்தானம்

பெறற்கரிய பேறாகக் கருதப்படுவது புத்திர சந்தானம். புத்திரர்களைப் பெறுவதால் வாழ்வு ஆன்மீக நிறைவடைகிறது. செல்வத்தைப் பெறுவதாலும், அறிவைப் பெறுவதாலும், கீர்த்தி அடைவதாலும் அடைய முடியாத நிறைவை புத்திரர்களைப் பெறுவதால் அடைய முடியும். ‘சத்புத்திரர்களைப் பெற்றால் ஏழு பிறப்பிலும் தீயவை தீண்டா’ என்பது ஆன்றோர் சொல்.

02. அன்பும் அமைதியும் ஏற்பட

“எங்கள் வீடு எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது. ‘எப்பொழுது சண்டை வரும்? எதனால் சண்டை உற்பத்தியாகும்’ என்று சொல்ல முடியாது. வீடு வீடாக இல்லை. வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை. எங்காவது ஓடி விடலாமா? என்று தோன்றுகிறது” என்பது சிலர் நிலை.

‘அவர்கள் வீட்டிற்கு அன்னை அமைதியையும், அன்பையும், அழகையும் கொண்டு வருவாரா? அது முடியுமானால் அதை முழுமையாகவும், விரைவாகவும் பெறுவது எப்படி’ என்பனவற்றை இக்கட்டுரையில் விளக்க முற்படுகிறேன்.

01. குடும்ப ஒற்றுமை

ஒரு குடும்பம் முன்னுக்கு வரும் காலத்தில், எந்தக் காரியத்தையும் அனைவரும் சேர்ந்தால்தான் செய்ய முடியும் என்பதாலும், எதிரிகள் இருக்கிறார்கள் என்பதாலும், ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவார்கள். பிரிந்திருக்க முடியாது. ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியாது என்பதால், ஒன்றாகச் சேர்ந்து இருப்பார்கள். மற்றவர்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் செயல்படுவதே நமக்கு அதிகத் திருப்தியைக் கொடுக்கிறது என்பதால், அதையே ஒரு முறையாகக் கொண்டு வாழும் குடும்பம் உண்டு.

II. குடும்பம்

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 41
  • Page 42
  • Page 43
  • Page 44
  • Page 45
  • Page 46
  • Page 47
  • Page 48
  • Page 49
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal