தத்துவ ஞானமான சாஸ்திரமும், மனித முயற்சியின் புனித உருவமான உற்சாகமும், சாதகனின் பயிற்சியை யோகானுபவம் ஆக்கும் குருவின் அருளும், இவற்றை எல்லாம் பூர்த்தி செய்யும் காலத்தின் கதியும் ஒருங்கிணைந்து யோக சித்தியை உருவாக்குகின்றன.
சிந்தனைக்குரிய மனித ஜீவனின் ஹ்ருதயத்தில் ‘வேத இரகசியம்’ எனும் பத்மம் மொட்டாக அரும்பியுள்ளது. பரமனின் கடாட்சம் பத்மத்தின் மீது பட்டவுடன், அது இதழ் இதழாகக் கட்டவிழ்கிறது.
பரமனே பத்மத்தின் பிதா. பரம்பொருளின் திருவுள்ளமே மனித உள்ளத்தின் மலர்ச்சி. திருவுள்ளம் இன்றி இதழ் அவிழ்வதில்லை. திருவுள்ளத்தால் தீண்டப் பெற்றால், மலர்வதைத் தடை செய்ய ஒருவர் இல்லை.