அன்னையின் வாழ்நாட்களில் அவர்களை நேரில் தரிசித்தவர்கள் தாங்கள் அன்னை தரிசனம் செய்ததாகக் கூறுவார்கள். பூதவுடலில் அன்னையைத் தரிசிப்பது பாக்கியம்; பூர்வ ஜன்மப் புண்ணியம். அன்னையின் தரிசனம் அத்துடன் நின்றுவிடவில்லை. அதைப் பல ரூபங்களில் காணலாம். ரூபத்திற்கேற்ப அம்சங்கள் உண்டு. என்றாலும், எந்த வகையில் அன்னையைக் கண்டாலும் அதுவும் பூரண தரிசனமே.
பொருள் ரூபாயாக இருக்கிறது. வெள்ளி ரூபாயாக உள்ள மரியாதை நோட்டிற்கு வெகுநாள் வரை வரவில்லை.