Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்

28. அன்னை காப்பாற்றும் விதம்

ஒரு 15 வயதுப் பையன் டேப்ரெக்கார்டரில் ஒரு டிரான்ஸ்பார்மரை இணைத்துப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். மேஜை மேலிருந்தவற்றை எடுத்து வேறு மேஜைக்கு மாற்ற ரெக்கார்டரை ஒரு கையிலும், டிரான்ஸ்பார்மரை ஒரு கையிலும் எடுத்தான். டிரான்ஸ்பார்மர் ஒரு ஷாக் கொடுத்ததுடன் அவன் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டது. ‘வீல்’ என்று குரல் எழுப்பினான். ‘விபத்து மின்சாரத்தால்’ என்று தெரிந்து, மெயின் ஸ்விட்சை நிறுத்தினால்தான் பையன் உயிர் பிழைக்க முடியும். விஷயம் புரிவதற்குள் ஆபத்து முற்றி விடும் நிலை. பையன் இருந்த இடம் ஆசிரமத்துக்குச் சொந்தமான விருந்தினர் விடுதியானதால் மெயின் ஸ்விட்ச் சற்று தள்ளி இருந்தது. என்றோ ஒருநாள் வந்து தங்குபவர்களுக்கு அது இருக்கும் இடம் தெரியாது. முதலில் அது எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த அறையில் இருந்த அவன் தந்தைக்குக் குரல் கேட்டதும் இது ஒரு ஷாக்காகத்தானிருக்க வேண்டும் எனச் சட்டென்று உதயமாயிற்று. அவர் ஓடிவந்து பார்த்துச் செயல்பட நேரமில்லை. பார்க்காமலும், செயல்பட்டால், வேறு காரணமாயிருந்தால் ஆபத்து மீறிப் போய்விடும். உரத்த குரலில் பையனின் பெயரை அழைத்துக்கொண்டு அடுத்த அறைக்கு ஓடினார். டிரான்ஸ்பார்மர் பிடித்த பிடியை விட்டுக் கீழே விழுந்தது. கரண்ட் நிற்கவில்லை. பையன் உயிர் பிழைத்தான்.

பையனின் அபயக் குரலைக் கேட்ட தகப்பனார் அன்னையைக் கூப்பிடக்கூட இல்லை. பையனின் பெயரையே உரக்கக் கூறினார். அவர் பையனின் பெயரைக் கூவினாலும், தன் பெயரையே கூவுவது போல் அன்னைக்கு அது கேட்டு, அன்னை செயல்பட்டு, பையனின் கையில் ஒட்டிக் கொண்டிருந்த டிரான்ஸ்பார்மரை தானே விழச் செய்தார். அன்னையைக் கூவி அழைத்தால் உடன் வருவது அவர் வழக்கம். கூவி அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் அந்தக் குரலை தன்னை அழைக்கவே எழுப்பிய குரலென உணர்ந்து, அன்னை அதைக் கேட்டுப் பதில் அனுப்பிவிட்டார். இது அன்னையின் அபயமளிக்கும் வகைகளில் ஒன்று.

***********

Book traversal links for 28. அன்னை காப்பாற்றும் விதம்

  • 27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு
  • Up
  • 29. அன்னை அருளின் சிறப்பு

Book navigation

  • 01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்
  • 02. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்
  • 03. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்
  • 04. ஆரோவில் நகரம்
  • 05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்
  • 06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்
  • 07. உடல் நலம், நோய், உடலின் தன்மை
  • 08. பணம், செல்வம்
  • 09. பழக்கம்
  • 10. கல்வி
  • 11. உலக நாடுகளைப் பற்றி அன்னை
  • 12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை
  • 13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு
  • 14. இந்தியா
  • 15. அன்னையின் தாய்மை
  • 16. இயற்கை
  • 17. தெய்வங்கள்
  • 18. திருவுருமாற்றம்
  • 19. எங்கும் அன்னை இருக்கின்றார்
  • 20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்
  • 21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன
  • 22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்
  • 23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்
  • 24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்
  • 25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி?
  • 26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்
  • 27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு
  • 28. அன்னை காப்பாற்றும் விதம்
  • 29. அன்னை அருளின் சிறப்பு
  • 30. அன்னையின் தரிசனம்
  • II. அன்னையும் வழிபாடுகளும்
  • பொருளடக்கம்
RSS feed
Powered by Drupal