‘அன்னையை நீ ஏற்றுக்கொண்டபின் என்ன நடக்கிறது?’ என்று முதல் கேள்வி. ‘அன்னை உன்னை ஏற்றுக்கொண்டபின் மேலும் நடப்பதென்ன?’ என்பது அடுத்த கேள்வி. எனது 28 ஆண்டு அனுபவத்தில் என் கண்ணால் கண்டவற்றையும், நானே முயன்று செய்தவற்றையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு, அவற்றுடன் இணைந்து காணப்படும் செயல்களை முன் நிறுத்தி மேற்சொன்ன இரு கேள்விகளுக்கும் பதிலளிக்க முயல்கின்றேன்.