Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன

‘அன்னையை நீ ஏற்றுக்கொண்டபின் என்ன நடக்கிறது?’ என்று முதல் கேள்வி. ‘அன்னை உன்னை ஏற்றுக்கொண்டபின் மேலும் நடப்பதென்ன?’ என்பது அடுத்த கேள்வி. எனது 28 ஆண்டு அனுபவத்தில் என் கண்ணால் கண்டவற்றையும், நானே முயன்று செய்தவற்றையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு, அவற்றுடன் இணைந்து காணப்படும் செயல்களை முன் நிறுத்தி மேற்சொன்ன இரு கேள்விகளுக்கும் பதிலளிக்க முயல்கின்றேன்.

20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்

‘‘இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் நல்லதல்ல. அடக்கமே செய்ய வேண்டும்’’ என அன்னை கூறுகிறார்கள். ஒருவர் இறந்தபின் அவரது உயிர் தீயின் சுடும் உணர்வை அறியும் உயிர் அவருடலில் ஏழு நாட்களிலிருப்பதால், அவர் உடலைச் சுட்டால் அவ்வுயிர் அதிர்ச்சியடைகிறது. ‘‘அப்படி அதிர்ச்சியடைந்த பல உயிர்கள் என்னிடம் வந்து முறையிட்டு இருக்கின்றன’’ என்கிறார் அன்னை.

அன்னைக்குச் செய்யும் சேவைக்குப் பலன் இருப்பதைப் போலவே, அன்னையின் பக்தர்களுக்குச் செய்யும் சேவைக்கும் பலன் உண்டு.

19. எங்கும் அன்னை இருக்கின்றார்

‘அன்னை’ என்பது ஒரு மானுட உருவம் தாங்கிய தெய்விக அவதார புருஷர் என்பதுடன், அன்னை அந்த அவதாரத்திற்கு அப்பாற்பட்டும் ஒரு தெய்விக சக்தியாக இருக்கிறார். அன்னையின் வாழ்நாளில் அவருடன் பழகியவர்கள், அவருக்குச் சேவை செய்தவர்கள், அவருடைய சிஷ்யர்கள், பக்தர்கள், அவருடைய பூதவுடலில் தெய்விக அவதாரத்தையும், சக்தியையும் தரிசித்தார்கள். அன்னை சமாதியடைந்த பின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டாலும், அவருடைய சூட்சும உடல் சமாதியிலும், ஆசிரமத்திலும், புதுவையைச் சுற்றிலும், அவர்களுடைய அன்பர்களின் உள்ளத்திலும், வாழ்விலும் நின்று நிரந்தரமாகச் செயல்படுகிறது.

18. திருவுருமாற்றம்

மனிதன் தன் இயற்கை - சிருஷ்டியில் உள்ள இயற்கையை - மாற்றி, தெய்வத்திற்கும் மேலாக உயர்ந்து, பூவுலகில் சத்திய ஆட்சியை நிலவி வாழ அவனுள் ஏற்படும் ஆத்மீக மாற்றங்களை அன்னை ‘திருவுருமாற்றம்’ (transformation) என்கிறார். சிருஷ்டியில் மனிதன் முதலில் மனித ஜீவியத்தை (consciousness) பெறுகிறான். பொதுவான ஜீவியம் ஒவ்வொரு மனிதனிலும் தனிப்பட்ட சுபாவத்தை (character) பெறுகிறது. அதாவது சுபாவம் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒவ்வொருவரும் வளர்ப்பு முறை, கல்வி, பிறந்த இடத்திற்கு ஏற்பச் சொந்த நடைமுறையை (behaviour) பெறுகின்றனர். மரியாதையாகப் பழகுவது நடைமுறையாகும். நல்ல நடைமுறை அல்லது நடத்தை என்கிறோம்.

17. தெய்வங்கள்

அன்னைக்கும் தெய்வங்களுக்கும் பல தொடர்புள்ளன. ‘‘தெய்வங்களுடைய அளவு (size) பூமியின் அளவுக்குச் சமம்’’ என்று அன்னை கூறுகிறார்கள்.

16. இயற்கை

யோக பாஷையில் பிரகிருதியையே ‘இயற்கை’ எனக் குறிப்பிடுவார்கள். வாழ்க்கையில் ‘இயற்கை’ என்று சொல்லும் பொழுது செடி, கொடி, மழை, ஆறு, குளம், வெட்ப தட்ப நிலை போன்று மனிதனால் செய்யப்படாமல் தானே உற்பத்தியானவற்றைக் குறிக்கிறோம்.

15. அன்னையின் தாய்மை

‘கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது’ என்பதால், தாய் என்பதை ஏற்படுத்தினார் என்று ஓர் இஸ்ரேலியப் பழமொழி சொல்கிறது. தாய்மையின் தெய்விகத்தை உணர்த்த கடவுளுக்கு இருக்கும் திறமையை இல்லையெனச் சொல்லி, அந்த இடத்தில் தாய்மையைப் பிரதிஷ்டை செய்கிறது இஸ்ரேல். ‘தாய்மை’ என்பது தன்னை மறந்த, தன்னலமற்ற, பலன் எதிர்பார்க்காத, பலனை நினைக்கக் கூடத் தெரியாத சேவையாகும். தாய்மைக்கே தெய்விகம் உரித்தானது. அன்னையே தெய்வம். அன்னையின் தாய்மையை விவரிக்க மொழியின் சிறப்போ, உணர்ச்சியின் பெருக்கோ திறமையுள்ளவையல்ல.

14. இந்தியா

‘‘இந்தியா புண்ணிய பூமி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆத்மிகம் வளர்ந்த நாடு. உலகத்தின் குரு. பலமாக வளர்ந்து பெருமையுற்று உலகத்தின் தலைமை வகிக்கக் கூடிய நாடு இந்தியா ஒன்றே. ஆங்கிலேயர்கள் இங்கு வந்து அளவு கடந்து தங்கிவிட்டார்கள். அவர்களோடு தொடர்புள்ள இந்தியா 30% அழகை இழந்தது. இன்னும் 70 சதம் அவர்களுடைய தொடர்பால் பாதிக்கப்படாமலிருக்கிறது. மேலை நாடுகளை இந்தியா பின்பற்றக் கூடாது. இந்தியாவின் தலைமையை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திய விவசாயிக்கு ஐரோப்பிய மேதையை விட ஆத்மீகம் புரியும். ஆண்டவனுக்கு அந்த மேதையை விட இந்திய விவசாயியே உகந்த புதல்வன்.

13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு

அன்னையைத் தரிசிக்க வந்த தந்திர யோகி ஒருவர், ‘‘நான் வணங்கும் லலிதாம்பிகை இதோ இருக்கிறார்கள்’’ என்று மகிழ்ந்து பேசினார்.

12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை

அன்னையை ஒருவர் சந்தித்தால் அன்னை அவர்களது கண்களை உற்று நோக்குவார். கண்கள் மூலம் அவரது ஆத்மாவை அன்னை ஊடுருவி அடைகிறார். ஆத்மாவைத் திறந்து அங்கு தன் அவதாரச் சிறப்பான இந்த ஜீவியத்தின் ஒரு பொறியை ஊன்றி விடுகிறார். அதன் பின் அப்பொறி அன்னையின் பிரதிநிதியாக அவரது ஆத்மாவில் நின்று அவர் வாழ்க்கையை நடத்திச் செல்லும். அதுபற்றி அன்னை கூறுவார் ‘‘நான் ஒருவரை ஒரு கணம் சந்தித்தாலும் வாழ்நாள் முழுவதும் அவரது வாழ்க்கைப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.’’

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 113
  • Page 114
  • Page 115
  • Page 116
  • Page 117
  • Page 118
  • Page 119
  • Page 120
  • Page 121
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal