கல்கத்தாவில் வாழ்ந்த டாக்டர் ஒருவருடைய பிள்ளையாக மகான் ஸ்ரீ அரவிந்தர் அவதரித்தார். அவருக்கு இரு சகோதரர்கள். ‘ஸ்ரீ அரவிந்தர் எனப்பெயரிட்டது அதுதான் முதல் முறை’ என ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிட்டுள்ளார். தன் பிள்ளைகளுக்கு இந்திய மொழி, பழக்கங்கள், ஆசாரங்கள் எதுவும் தெரியலாகாது. அவர்கள் ஆங்கிலம் மட்டும் பயின்று, இங்கிலாந்துப் பழக்க வழக்கங்களைப் பெற்று, ஆங்கிலேயர்கள் போல வளர வேண்டுமென எண்ணிய தகப்பனார், குழந்தைகளை டார்ஜிலிங் நகரிலுள்ள ஓர் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தார். ஸ்ரீ அரவிந்தர் அப்பள்ளியில் சேர்ந்தவுடன், ‘ஒரு கரிய இருள் தன்னுள் புகுந்து நிலைத்து விட்டது’ என்கிறார்.