பகவான் திருநாமத்தை ஸ்மரணை செய்வது நம் பழக்கம். பூரணயோகத்தில் அன்னையை அழைத்து மனதில் பிரதிஷ்டை செய்வது அடிப்படையான யோகப்பயிற்சி. பக்திப்பெருக்கால் ஒரு நேரம் தானே ஆரம்பித்த அழைப்பு, சில சமயம் நீண்ட நேரம் தொடர்வதுண்டு. ஆர்வத்தால் ஆரம்பித்த அழைப்பு எதிர்பாராத நல்ல சில பலன்களையும் தருவதுண்டு. பிரச்சினைகள் தீருவது, புதிய திறமைகள் ஏற்படுவது, இடையறாத அன்னை நினைவு நிலைப்பது போன்றவையும் நிகழ்வதுண்டு. க்ஷண நேரம் அன்னையுடன் இரண்டறக் கலக்கும் பேரின்பச் சித்தியும் கிடைப்பதுண்டு.