Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

12. நோயற்ற வாழ்வு

உடல் தெய்வம் உறையும் இடம். திடகாத்திரமும், ஆரோக்கியமுமே அதன் இயல்பு, பிறப்புரிமை. நோயுறுதல் உடலுக்கு இயற்கையில்லை. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த முன்னோர்களும், இன்றும் அதுபோல் வாழும் மலைவாசிகளும் மிக ஆரோக்கியமாக வாழ்தல் அதற்கு சான்று. உடல் தன் இயற்கையை மறந்து மனித அறிவுக்குத் தன்னை உட்படுத்தி, மனத்தின் அடிமையாக இருப்பதால், மனத்தில் ஏற்படும் பயம், சஞ்சலம், சபலம், சந்தேகங்கள் உடலையும் பாதிக்கின்றது; அதனால் நோய் ஏற்படுகிறது என்கிறார் அன்னை. ஆயிரத்தில் ஒன்றே உண்மையான உடலைப் பற்றிய நோய். அதற்குத்தான் வைத்தியம் தேவை. மற்றவை மனத்தால் உடலில் உற்பத்தியான குறைகளாகும் என்கிறார் அன்னை.

11. மௌனத்தில் வெளிப்படும் மனோசக்தி

இச்சையற்றவர்க்குச் சித்திக்கும்' என்பது தமிழ்நாட்டு வாக்கு. இது ஆத்மீக அடிப்படையில் ஏற்பட்ட உண்மை. இந்த மகத்தான உண்மையின் ஒரு சிறு பகுதி, ஒரு கதிர் போன்ற மற்றொரு உண்மையைப் பற்றிய கட்டுரை இது. நாம் எண்ணிய கருத்தை வெளியிட வேண்டிய காலத்தில் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதை வெளியிடாமல் இருந்தால், அந்தக் கருத்திற்கு ஒரு சக்தி வருகின்றது. நாம் வெளியிட்டுப் பெறும் பலனைவிட, வெளியிடாமலிருக்கும்போது கிடைக்கும் பலன் அதிகமானது. அந்தச் சக்தி மனத்தின் சக்தியாகும். மௌனமாக நாமிருக்கும்பொழுது சக்தியுடன் வெளிப்படும் எண்ணத்தின் திறனாகும். அதை silent will என்கிறோம்.

10. அமுதசுரபி

அமிர்தத்தைத் தேடி பாற்கடலைக் கடைய, ஆரம்பத்தில் கிடைத்தது ஆலகாலம். அதுவே சிருஷ்டியின் அமைப்பும், சிறப்பும் ஆகும். வாழ்வின் இருபுறங்கள் ஒளியும், இருளும் ஆகும். அதைப் போன்றே ஆலகால விஷமும், அமிர்தமும் சிருஷ்டியின் இரு கோடிகள் ஆகும். சுவர்க்கத்தை நாடிப் போனால் வழியில் நரகம் வரும். நரகத்தைத் தாண்ட மறுப்பவர்கள் சுவர்க்கத்தை அடைய முடியாது என்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் வாக்கு. ஆதிநாள் முதல் இன்றுவரை உள்ள நிலை இது. பூரணயோகம் மனித வாழ்க்கையைத் தெய்வீக வாழ்க்கையாக மாற்ற முயலும்பொழுது சிருஷ்டியின் அடிப்படையையே மாற்றிவிடுகிறது.

9. பிரார்த்தனை

சாவித்திரி:

8. உள்ளத் திருக்கோயில்

அன்னையை வழிபட பல முறைகளை விவரித்து அன்பர் வழிபாடு' என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டோம். அந்த முறைகள் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு சிறப்புண்டு. இக்கட்டுரையில் அந்தச் சிறப்பைக் குறிக்கப் பிரியப்படுகிறேன்.

7. நல்லது மட்டுமே நடக்கும்

அமெரிக்கர் ஒருவர் பாண்டிச்சேரி வந்திருந்தார். 56 வயதானவர். மனைவி, 3 வயதுவந்த குழந்தைகளை விட்டுவிட்டு வந்திருந்தார். அவருடைய வீட்டில் (telex) தந்தி வசதி இருந்தது. இங்கு வந்து தங்குமிடத்திலும் அதே வசதியிருந்ததால், தம் மனைவியிடம் வீட்டுச் செய்திகளை அடிக்கடி அனுப்பும்படிச் சொல்லி இருந்தார். வந்தவர் வந்த வேலையில் மூழ்கித் தம்மை மறந்திருந்தார். 7 நாட்களாக மனைவியிடமிருந்து ஒரு செய்தியும் இல்லை. அதாவது அவர் வேலையைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய செய்திகள் ஒன்றுகூட இல்லை. 7ஆம் நாள் அவர் மனம் உடைந்துவிட்டார்.

6. தெய்வ நம்பிக்கை

பக்தியும், நம்பிக்கையும் தெய்வ வழிபாட்டின் அஸ்திவாரங்கள். நம்பிக்கை என்ற சொல் faith என்பதைக் குறிக்கும். Belief என்ற ஆங்கிலச் சொல்லையும் நம்பிக்கை என்று மொழிபெயர்க்கலாம். conviction என்பதையும் நம்பிக்கை என்று சொல்வதுண்டு. நான் இக்கட்டுரையில் நம்பிக்கை எனக் குறிப்பிடுவது faith என்ற பொருளில். ஸ்ரீ அரவிந்தர் இந்தத் தலைப்பில் 3 அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார்.

5. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன்

கோயிலுக்குப் போய் தெய்வத்தை வணங்கும் மனிதன் வானுலகில் உறையும் தெய்வம் வழிபாட்டுக்குரியது என்பதை அறிந்தவன். நாளடைவில் இந்தப் பழக்கம் வேரூன்றி மனிதன் தெய்வத்திடமிருந்து விலகி, மரணத்திற்குப்பின் சேர வேண்டிய இடம் இறைவன் திருவடி என உணர்ந்து, தன் வாழ்வை வழிபாட்டுக்கு உரியதாகக் கொள்கிறான். இதன் பலன் தெய்வம் என்பது உலக வாழ்வில் உணர முடியாத ஒன்று என்று நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. உலகமாந்தர் அனைவரும் பக்தியால் உந்தப்பட்டவரானாலும், நடைமுறையில் ஆத்மீகம் பின்னணிக்குப் போய் பூஜையும், விழாவும் நிறைந்த மதச் சடங்குகளே நிதர்சனமாக நிலைக்கின்றன.

4. அன்பர்கள் வழிபாடு

ஒரு முறை அன்னையை எப்படி வழிபடுதல் சிறந்தது என்ற பிரச்சினை பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டபொழுது ஒரு பிரஞ்சுக்காரர் அன்னையிடம் இது பற்றி குறிப்பிட்டார். "Why do you want to worship the divine? Why don't you become the divine?'' இறைவனாகவே நாம் மாற முடியும் எனும்பொழுது, ஏன் நாம் இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்று விவாதிக்க வேண்டும் என்ற கருத்தை அன்னை வெளியிட்டார். அன்னை நாம் அவரிடம் பிரார்த்திகாமலே அளித்துள்ள தெய்வீக வரப்பிரசாதம் அது: சாதகன் யோகத்தால் இறைவனாக மாறலாம்; அன்னையாகவும் மாறலாம்.

3. பிரச்சினை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல்

கணவனுக்குப்  பொறுப்பில்லை;  பிள்ளைக்குப்  படிப்பு  வரவில்லை; வைத்த    நகைகளை    மீட்கவில்லை;    முதலாளியின்    முன்கோபம் என்னைப்    பெரிதும்    பாதிக்கிறது;    வாழ்க்கை    பிரச்சினையாக ஆரம்பித்து,    சிக்கலாக    மாறி,    வேதனையாகவும்,    நரகமாகவும் ஆகிவிட்டது;   ஏன்   பொழுது   விடிகிறது   என்று   கண்ணில்   ஜலம் வருகிறது;   இன

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 48
  • Page 49
  • Page 50
  • Page 51
  • Page 52
  • Page 53
  • Page 54
  • Page 55
  • Page 56
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal