உடல் தெய்வம் உறையும் இடம். திடகாத்திரமும், ஆரோக்கியமுமே அதன் இயல்பு, பிறப்புரிமை. நோயுறுதல் உடலுக்கு இயற்கையில்லை. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த முன்னோர்களும், இன்றும் அதுபோல் வாழும் மலைவாசிகளும் மிக ஆரோக்கியமாக வாழ்தல் அதற்கு சான்று. உடல் தன் இயற்கையை மறந்து மனித அறிவுக்குத் தன்னை உட்படுத்தி, மனத்தின் அடிமையாக இருப்பதால், மனத்தில் ஏற்படும் பயம், சஞ்சலம், சபலம், சந்தேகங்கள் உடலையும் பாதிக்கின்றது; அதனால் நோய் ஏற்படுகிறது என்கிறார் அன்னை. ஆயிரத்தில் ஒன்றே உண்மையான உடலைப் பற்றிய நோய். அதற்குத்தான் வைத்தியம் தேவை. மற்றவை மனத்தால் உடலில் உற்பத்தியான குறைகளாகும் என்கிறார் அன்னை.