Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

16. உறுத்தல்

எக்ஸ்கர்ஷன், சுற்றுலா என்ற வார்த்தையை என்னிடம் சொல்லாதே, கடந்த பதினைந்து வருஷமாக இந்தச் சொல்லையே என்னால் கேட்டுக் கொள்ள முடியவில்லை. என்னை எக்ஸ்கர்ஷனுக்கு அனுப்புவதாகச் சொல்லி அப்பா ஏமாற்றியதை இவ்வளவு நாள் கழித்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் இந்தச் சொல்லைக் கேட்டுவிட்டால் எனக்கு இரண்டு நாளாகும் எரிச்சல் அடங்க. இன்றும் அது மனதில் ஒரு உறுத்தலாகவே இருக்கிறது. அரைப் பரீட்சையில் கணக்கில் 75 மார்க் வாங்கினால் எக்ஸ்கர்ஷனுக்கு அனுப்புகிறேன் என்றார் தகப்பனார். உயிரைவிட்டுப் படித்தேன். முழு ஆர்வமும் பலன் கொடுத்தது. 80 மார்க் வாங்கினேன்.

15. வாய்ப்பைத் தரும் சூழ்நிலை

வாய்ப்பு அரிது. எல்லோருக்கும் கிடைக்காதது, சிலருக்குக் கிடைக்கின்றது, அதைச் சுட்டிக் காட்டும் வாக்கு, நாயாகப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்' என்பது. பிறந்த நேரம் பெரிய வாய்ப்பை மனிதனுக்கு அதிர்ஷ்டமாகத் தருகிறது என்பதை உலகம் அறியும். வாய்ப்பு மனிதனுக்கு வரும் உருவங்களையும், அவற்றின் தன்மைகளையும் விளக்கி ஆன்மிகத்திற்கும் வாய்ப்புக்கும் உள்ள தொடர்பை இக் கட்டுரை விளக்குகிறது. அத்துடன் அன்னைக்கும் வாய்ப்புக்கும் என்ன தொடர்பு, அன்னை பக்தர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் கட்டுரை விளக்குகிறது.

14. சத்தியஜீவியம்-அது

ஸ்ரீ அரவிந்தர் தன் யோகத்தைப் பூரணயோகம் என்றும், சத்தியஜீவிய யோகம் என்றும் அழைத்தார். மனிதன் தன் ஆன்மிக முழுமையடையும் பாதை இது என்றார். மனிதன் தன் தவ முயற்சியால் ஜீவாத்மாவைக் கண்டு, அதன் மூலம் பரமாத்மாவை அடைவது மோட்சம். மனிதன் சரணாகதி மூலம் இறைவனை தன்னுள் கண்டு, அதன் மூலம் ஜீவாத்மாவை யடைந்து, ஜீவாத்மாவை பரமாத்மாவின் கருவியாக மாற்றி, பரமனின் திருவுள்ளத்தை உலக ஜீவன்களில் பூர்த்தி செய்வது பூரண யோகம்.

13. நன்றியறிதல்

எதிர்பாராமல் மந்திரி பதவி கிடைத்தவர் தன் நன்றியை யாருக்குத் தெரிவிப்பது, எப்படித் தெரிவிப்பது என்று திகைத்தார். தனக்கு அன்று கிடைத்த பெரிய பேறு தான் பத்து ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளித்தலைமை ஆசிரியரின் முயற்சியால் என்று நினைத்தார். முப்பது மைல் தூரம் பிரயாணம் செய்து பழைய பள்ளியை அடைந்து தலைமை ஆசிரியரைச் சந்தித்து மாலையிட்டு வணக்கம் தெரிவித்து நன்றியை வெளிப்படுத்தி மகிழ்ந்தார்.

12. நினைவால் நிறைந்த குடும்பம்

20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரமம் வருபவர் தான் முதலில் அன்னையை தரிசித்ததை நினைவு கூர்ந்து "அன்னையால் என் வாழ்வில் நடந்த நன்மைகள் பல என்றாலும் கடந்த ஓராண்டாக நான் அன்னையைத் தீவிரமாக ஏற்றுக்கொண்டதால் ஏற்படும் நன்மைகள் வியப்பைத் தருகின்றன. இடைவிடாத பிரார்த்தனையும், அழைப்பும் கடந்த சில மாதங்களாக என் வாழ்க்கையையே மாற்றிவிட்டன. சுருக்கமாகச் சொன்னால், எல்லாம் நல்ல செய்திகளே. நடந்த நிகழ்ச்சிகளை நடந்த பின்னும் நம்ப முடியாமலிருக்கின்றது'' என்றார்.

11. பிறருக்காகப் பிரார்த்தனை செய்தல்

தன்னலம் கருதாதவரை உலகம் இலட்சிய புருஷனாகக் கருதுகிறது. மனித வாழ்வில் அதையே சிகரமான பண்பு எனலாம். இருபதாம் நூற்றாண்டுக்கு எளிய மனிதனின் நூற்றாண்டு எனப்பெயர். சமூகம் எளிய மனிதனை உயர்ந்த மனிதனாக்க பெருமுயற்சி எடுப்பதை இலட்சியமாகக் கொண்ட நூற்றாண்டு இது. பூரண யோகத்தின் அடிப்படையே, தான் என்பது அழிந்து உலகத்துடன் இரண்டறக் கலக்கும் நிலையாகும்.

மனித உறவுகளில் சிறந்ததாகக் கருதப்படும் தாய்மைக்கு அவ்வுயர்வு ஏற்பட்டதற்குரிய காரணம் தன்னை மறந்து தாய் தன் குழந்தையின் நலனைப் பாராட்ட முடிகிறது என்பதே. தெய்வத்திற்கு அடுத்த இடம் தாய்மைக்குக் கிடைத்ததற்கு தன்னலமற்ற குணமே காரணம்.

10. கர்மம், அருள், பேரருள்

அவனன்றி ஓரணுவும் அசையாது. உலகை நடத்துபவன் அவனே. ஒவ்வொரு அணுவும் அவன் ஆணைக்காகக் காத்திருக்கின்றது என்ற உண்மையை நாம் நெடுநாளாக அறிவோம்.

அருளின் செயலை அன்னை விளக்கி, அது செயல்படும் மூன்று நிலைகளைக் குறிப்பிடுகிறார். உலகில் அருள் செயல்படும்பொழுது தனிமனிதன் தன் கர்மத்தின் மூலம் முன்னுக்கு வரும் வகையில் செயல்படுகிறது. அருள் மனிதர்களைக் கட்டிக் காக்கிறது. ஆனால் அவரவர் தங்கள் செயல்கள் மூலம் முன்னேற அனுமதிக்கிறது. அதாவது தாங்கள் செய்ததை தாங்களே அனுபவித்து பின்னர் முன்னேற்றமடைய வேண்டும்.

9. செயல் கண்ட தெய்வம்

பூரண யோகத்திற்கு இதுவரை வகுத்த சாஸ்திரம்பயன்படாது. எந்த மனித குருவும் இந்த யோகத்தைப் பூர்த்தி செய்ய உதவமாட்டார் என்பவை பகவானுடைய கொள்கைகள். பொதுவாகப் பகவான் சொல்லியவற்றுக்கு எதிரானவையும் உண்மை என்ற அளவில் அவர் மற்றவற்றைச் சொல்லியிருப்பதுடன், அதுபோல் நடந்து கொண்டும் இருக்கின்றார். எந்த மனித குருவும் என் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய உதவமாட்டார் என்ற சாதகனுக்குப் பகவான் நடைமுறையில் வகுத்த முறை வேறு.

8. எண்ணமும் பலனும்

நல்ல எண்ணத்திற்கு உலகெங்கும் பாராட்டு காத்திருக்கின்றது. கெட்ட எண்ணத்திற்கு ஆதரவளிக்க முன் வருபவரில்லை. நல்லவர் ஒருவரிருந்தால் அவரால் உலகுக்கு நல்லது நடக்கும் என்ற எண்ணம் உலகில் உண்டு. நல்லவர்கள் வாழ்வதில்லை நானிலத்தில் என்ற சொல்லுக்கும் உண்மையுண்டு எனும்படி பல நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். எண்ணத்திற்கும், பலனுக்கும் தொடர்பிருப்பது தெரிகிறதே தவிர, முடிவாகச் சொல்லும்படி கண்ணுக்குத் தெரிபவை குறைவு. நம் சொந்த வாழ்க்கை நமக்கு விவரமாகத் தெரியுமாதலால், அவை ஆராய்ச்சிக்குரிய விஷயமாகும்பொழுது தெளிவு ஏற்படும். எண்ணத்தைப் பற்றிய ஆராய்ச்சியைத் தீவிரமாக மேற்கொண்டால் சுமார் 95% தெளிவு ஏற்படும்.

7. அகமும் புறமும்

அன்னை மீது நம்பிக்கை ஏற்பட்டு இத்தனை வருஷமாக நான் செய்த பிரார்த்தனை ஒன்று கூட தவறியதில்லை. பெரும்பாலும் அவை உடனே பலித்து விடும். சில பிரார்த்தனைகள் தாமதமானதுண்டு, ஒரு போதும் தவறியதில்லை. தாமதமான பிரார்த்தனைகளை பிறகு யோசனை செய்து பார்த்ததில் அவற்றுள் சிலவற்றில் தாமதம் ஒரு நல்ல காரணத்திற்காக நடந்ததைக் கண்டேன். வேறு சில இடங்களில் எனக்குத் தெரிந்த குறையை விலக்காமல் நான் காத்திருக்க வேண்டியதாயிற்று என்ற அன்பர்கள் அநேகம்.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 96
  • Page 97
  • Page 98
  • Page 99
  • Page 100
  • Page 101
  • Page 102
  • Page 103
  • Page 104
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal