அடக்கம் என்பது என்ன என்று அன்னை விவரிக்கும்பொழுது தன் அறியாமையின் முழுமையை அறிவது அடக்கம் என்கிறார். இறைவனின் திருவுள்ளம் செய்ய முனைந்திருப்பது எது என்று உணர்வதே அறிவு. அந்த அறிவு தனக்கில்லை என்ற தெளிவே அடக்கம் என்கிறார். அன்னை தான் ஒரே ஓர் அடக்கமான மனிதனைப் பார்த்திருப்பதாகச் சொல்லி அது பகவான் ஸ்ரீ அரவிந்தர் எனவும் கூறுகிறார்.